18,600 அமெரிக்க டாலர்களை கைப்பற்றிய சுங்கத்துறை.!

சென்னை விமான நிலைய சுங்கத்துறை இன்று துபாய்க்கு ஏ.ஐ. எக்ஸ்பிரஸ் 1643 விமானம் மூலம் செல்ல இருந்த ஒரு பயணியிடமிருந்து ரூ. 13.7 லட்சம் மதிப்புள்ள 18600 அமெரிக்க டாலர்களை கைப்பற்றியது. இந்த பணத்தை உள்ளாடை மற்றும் சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தார் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.