பெண்களை அடியாக பார்க்கின்ற ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் கற்கால சிந்தனைகளையொட்டி, இந்த மாதிரியான வினாதாளை சிபிஎஸ்சி வைத்துள்ளார்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி […]