அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் 10 பேர் மீது தான்தோன்றிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் … Read more

விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு.!

திருச்சி உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதற்காக உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதால் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.