#BREAKING: புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு..!

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது . நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய … Read more

புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன ? ஆய்வு செய்ய தமிழகம் வந்தது மத்திய குழு

புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய  குழு தமிழகம் வந்துள்ளது.  தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சேதங்கள் கடும் சேதமடைந்தன.இந்நிலையில் புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு 3 நாட்கள் பயணமாக மதுரை விமான நிலையம் வந்துள்ளது .மத்திய இணைச் செயலாளர் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு  அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கின்றனர். புதன்கிழமையுடன் … Read more

நிவாரண பொருட்களை வழங்கும் போது திடீர் உடல்நலக்குறைவு ! மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி ?

நிவாரண பொருட்களை வழங்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வெள்ள நீரை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.அந்தவகையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். … Read more

புயல் பாதிப்பு – முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர்திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் … Read more

#BREAKING: முதலமைச்சர் பழனிசாமி கடலூரில் நாளை நேரில் ஆய்வு

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர்  பழனிச்சாமி நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  புயல் … Read more

புரெவி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது..!

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் கடந்த 2 நாட்களாக நிலைக்கொண்டு இருந்த நிலையில், இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் மையம் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The Well Marked Low Pressure Area over … Read more

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்துள்ள போதும், தற்போது உருவான புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை … Read more

புரேவி புயலுக்கு பலியான 7 பேர் .! முதல்வர் பழனிச்சாமி இரங்கல்.!

புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், மன்னார்குடி,நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் பரவலாக பெய்த கனமழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் காணப்படுகிறது.மேலும் புயல் மழையால் பலர் உயிரிழந்தும் உள்ளனர் . நேற்றைய … Read more

சென்னையில் குடிசையில் வாழும் மக்களுக்கு இலவச உணவு! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்க முதல்வர்  உத்தரவு. கடந்த சில நாட்களாக நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்துள்ளதால், வீடுகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடிசை பகுதியில் வாழும் மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அவர்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் … Read more

புயலால் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

புரெவி  புயலால் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் “புரெவி’ புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த … Read more