Justnow:கொரோனா தொற்று உறுதி…தனிமைப்படுத்திக் கொண்ட பில்கேட்ஸ்!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதையடுத்து கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து காணப்பட்டது. ஆனால்,கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே,உலக பணக்காரர்களில் ஒருவரும்,மைக்ரோசாஃப்ட் இணை நிறுவன தலைவருமான பில்கேட்ஸ் கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு,குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் … Read more

#Alert:இன்னும் அபாயகரமான கொரோனா வேகமாகப் பரவும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் ஏரளாமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்,பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பலரது வாழ்க்கையே திசை திரும்பியது. இந்த நிலையில்,தொற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்று மக்கள் பலரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில்,மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் உலகிற்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அதாவது,மோசமான கொரோனா தொற்றுநோய் இன்னும் வரவில்லை என்றும்,டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளைக் காட்டிலும் “இன்னும் … Read more

ஒரே நாளில் ஒரு கோடி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!

ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை … Read more

கேட்ஸ் தம்பதியரின் விவாகரத்து குறித்து மனம் திறந்த மூத்தமகள் ஜெனிஃபர் கேட்ஸ்!

உலகின் பில்லியனர் ஜோடிகளான கேட்ஸ் தம்பதிகள் 27 வருடங்களுக்குப் பிறகு தற்போது விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அவர்கள் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் அவர்கள் தனது இணையதள பக்கத்தில் மனம் திறந்துள்ளார். உலகின் பணக்கார ஜோடிகளில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் 27 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்பொழுது விவாகரத்து செய்துகொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 27 வருட திருமண வாழ்க்கைக்கு பின்பதாக மீண்டும் … Read more

திருமண வாழ்வில் தொடர விருப்பமில்லை … பில்கேட்ஸ் தம்பதிகள் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸ் அவர்களும், பில்கேட்ஸ் ஆகிய … Read more

இந்தியாவின் தலைமையை பார்ப்பதில் மகிழ்ச்சி – பில்கேட்ஸ் புகழாரம்

அறிவியல் கண்டுபிடிப்பு, தடுப்பூசி உற்பத்தி திறனில் இந்தியாவின் தலைமையை பார்ப்பதில் மகிழ்ச்சி என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தற்போது இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு தற்போது அனுமதி கொடுத்து உள்ளது. இதனிடையே. டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய இயற்பியல் … Read more

உலக பணக்காரர் பட்டியல்: பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் எலான் மஸ்க்!

உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலான் மாஸ்க், இரண்டாம் இடத்திற்கு வந்தார்.  டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் கடந்த மாதம் 3 ஆம் இடத்தில் இருந்தார். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இதன் காரணமாக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி, எலான் … Read more

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி முக்கியம் – பில் கேட்ஸ்

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி முக்கியமானதாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்  தெரிவித்துள்ளார்.  கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் (Grand Challenges Annual Meeting 2020)  உரையாற்றினார் பில் கேட்ஸ் .அவரது உரையில்,கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.இது இந்தியாவை  “மிகவும் ஊக்கமளிக்கிறது”. “இப்போது, ​​இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பெரிய … Read more

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ரூ 7,15,16,00,000 வாரி வழங்கிய பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 722 உயிரிழந்துள்ளனர் .நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இதனிடையே உலக சுகாதார அமைப்பு  இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு  குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது . அதன் அவசரநிலைகளுக்கான  தற்செயல் நிதியிலிருந்து  9 மில்லியனைத் கொடுத்தது. WHO வின்  … Read more