டமாஸ்கஸ் : உலகமே உற்றுநோக்கும் தலைப்பு செய்தியாக தற்போது மாறி இருக்கிறது சிரியா நாட்டின் உள்நாட்டு போரும், அந்நாட்டு அதிபர் தப்பியோடிய தகவலும் தான். உள்நாட்டில் பல்வேறு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்து வந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு சிரியா நாட்டின் தலைநகரை கைப்பற்றியுள்ளது. இதனால், சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தனி விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். அவர் தற்போது ரஷ்யா மாஸ்கோவில் […]
டமாஸ்கஸி : சிரியா நாட்டில் உள்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றி விட்டனர். அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை முழுதாக கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகரை விட்டு தனிவிமானம் மூலம் தப்பி சென்றுள்ளார். இதனால் தப்பி சென்ற சிரியா நாட்டு அதிபரை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவம் மற்றும் உளவுத்துறை மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் அந்நாட்டு செய்தி நிறுவனங்களின் தகவலின்படி […]
2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் அதிபர் ஆசாத்- ஐ.எஸ் பயங்கரவாதிகள் – கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் நடந்துவருகிறது.தற்போது இந்த மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.அதேபோல் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவில் பல்வேறு பகுதிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் […]