வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறைந்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 13வது நாட்களாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல துறைகளை சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் கலந்துகொண்டும் வருகின்றனர். நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை […]