பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி […]
காஷ்மீரில் பாண்டிபோராவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரில் உள்ள பாண்டிபோராவின் சும்ப்லர் பகுதியில் உள்ள ஷோக்பாபா காட்டில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன. பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் […]