அயோத்தியில் ராமர் கோவில் எப்போது கட்டிமுடிக்கப்படும்?! தற்போது வரை என்ன வேலைகள் நடைபெற்றுள்ளன?!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் எனவும் அதில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்புக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட ஏற்பாடுகள்தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொடுத்த வரைபடத்தின் படி ராமர் கோவில் கட்டமைக்கப்பட்ட உள்ளது. கட்டப்படும் கோவிலின் உயரம் … Read more

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் – ஹெச்.ராஜா பேட்டி

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்  என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அயோத்தி தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் அயோத்தியில் கோயில் கட்ட அனுமதி அளித்தது. இந்த நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் .உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது. தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று  … Read more

நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்கிறேன் – சிவசேனா தலைவர்  அறிவிப்பு

நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்கிறேன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் சிவசேனா தலைவர்  உத்தவ் தாக்கரே இது குறித்து கூறுகையில்,நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்கிறேன். அயோத்தி வழக்கில் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. ராமர் கோயில் … Read more

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ! நான் மதிக்கிறேன் -ரஜினிகாந்த் கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன்.அனைவரும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.