டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான ‘முதன்மை’ விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டனும் இந்திய விமானப்படை (IAF) அதிகாரியுமான சுபன்ஷு சுக்லா, இந்த ஆண்டு மே மாதம் நாசாவின் ஆக்சியம் மிஷன் 4 குழுவினருடன் சர்வேதேச விண்வெளிக்குச் செல்வார். அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, மே 2025 க்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் குழுவினர் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட மாட்டார்கள். மேலும், குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை […]
நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மெய்ர் என்ற விண்வெளி வீராங்கனைகள் இருவரும் விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த இரு பெண்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே பழுதான பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவதற்கு மேற்கொண்ட முயிற்சி வெற்றி அடைந்துள்ளது.