அசாமை சேர்ந்த வழக்கறிஞர் தனது திருமண பத்திரிகையை நீதிமன்ற தீர்ப்பு போல அச்சிட்டு உள்ளார். அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில், இணையத்தில் வைரலாக பலரும் பலவிதமாக சிந்தித்து செயல்படுத்தி வருகின்றனர். அவர்கள் சிந்தித்ததில் எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்திருந்தால் உலக பணக்காரர்களின் வரிசையிலே உக்காந்திருப்பார்கள் போலும் அந்தளவுக்கு பிரபலமாக சிந்திக்கிறார்கள். அப்படிதான், அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞர் வித்தியாசமாக பல நாட்கள் யோசித்து அவரது திருமண பத்திரிகையை வடிவமைத்துள்ளார். அசாம், கௌஹாத்தியில் நடைபெறவுள்ள […]
அசாமில் ஆட்டோ மீது ட்ரக் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டம் பைதல்கால் என்ற இடத்தில் அதிகாலை 5 மணியளவில் கரீம்கஞ்ச் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த ட்ரக் ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஒருவரைத் தவிர ஆட்டோவில் பயணம் செய்த அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், விபத்துக்கு காரணமான ட்ரக் […]
சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போல கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் […]
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதியில் கூடியிருந்த மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். […]
அசாமில் இன்று நள்ளிரவு 12.52 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அசாமில் தென்மேற்கு பகுதியில் 40 கி.மீ தொலைவில் நள்ளிரவு 12.52 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த […]
அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தையொட்டி அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. இன்று 6 ராட்சத உலைகளில் 2,479 காண்டாமிருகக் கொம்புகளை விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும் அசாம் அரசு எரித்துள்ளது. அசாமில் உலகிலேயே ஒற்றை கொம்பு அதிகமாக உள்ள காண்டாமிருகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள காசிரங்கா, மணஸ், ஓரங் ஆகிய பகுதியின் தேசிய பூங்காவில் உள்ள 2,500 க்கும் அதிகமான காண்டாமிருக கொம்புகள் […]
அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜர் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் புதிதாக யுனைடெட் லிபரேஷன் ஆஃப் போடோலாண்ட் (யுஎல்பி) குழுவின் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இம்மாவட்டத்தில் உள்ள உல்தபாணி ரிசர்வ் வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததுள்ளது. தீவிரவாதிகளின் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து, அந்தப் பகுதியில் இருந்த இரண்டு பிஸ்டல்கள் (9 மிமீ மற்றும் 7.65 மிமீ), எட்டு ரவுண்ட் லைவ் […]
அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி. மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை […]
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது […]
அசாம் மாநிலத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]
அசாம் மாநிலம் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்துள்ளது. அதனால் மாநிலங்களில் பாதிப்புக்கு ஏற்றவாறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள கொரோனா பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. […]
அசாமில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் கிராமத்தில் உள்ள குடிசைகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கனமழை காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே அவர்களது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், இதனால் தங்கள் […]
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கனமழை காரணத்தினால் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இதுவரை அம்மாநிலத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வரை வெள்ளப்பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலத்தின் பதினாறு […]
அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததில், 5 பெற்ற உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவோ நகருக்கு உட்பட்ட பகுதியில் திஸ்மாவோ கிராமம் அருகே உம்ரங்சோ லங்கா சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்த லாரிகள் மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மீது தீ பரவியதால், 7 லாரிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இந்த […]
இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்ட அசாமை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளம் முழுவதும் இது குறித்த செய்திகள் மற்றும் கருத்துக்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் அனைவரும் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் பலரும் ஆப்கானிஸ்தானின் மக்கள் நிலையைக் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் இன்று வழங்கியுள்ளார். அசாம் மாநில முதல்வர் […]
அஸ்ஸாமில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பகல் 12.46 மணியளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அம்மாநிலத்தின் மோரிகான் பகுதியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 92 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அசாமில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அசாமில் இன்று காலை 8.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அருகில் இருந்த மாநிலங்களான மேகாலயம், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அசாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கோல்பாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், 14 கி.மீ. ஆழம் வரை உணரப்பட்டும் இருந்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் […]