சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால், அறிஞர் அண்ணாதுரை (சி. என். அண்ணாதுரை) தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியை கைபிடித்தது. தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த ஆண்டு மார்ச் 6 -ஆம் தேதி அறிஞர் அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். 1967 சட்டமன்ற தேர்தலில், திமுக 234 இடங்களில் 137 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. […]
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் பலர் உடன் […]
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர். நாளை மறுநாள் (பிப்ரவரி […]
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று (செப்டம்பர் 17) திமுக பவள விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் வெகு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்த தினம், திமுக தொடங்கிய நாள் என முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற உள்ளது. திமுக கட்சியானது அறிஞர் அண்ணாவால், 1949ஆம் ஆண்டு […]
அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து தனது டிவிட்டர் […]
தமிழக அரசியலில் மறுக்க முடியாத ஆளுமை சக்தி அறிஞர் அண்ணா. தமிழகத்தை கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆண்டு வரும் பிரதான திராவிட கட்சிகளின் ஆணிவேர் தான் அறிஞர் அண்ணா. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டம் பெற்றாலும், இலக்கியத்தில் அதிக நாட்டம் காட்டினார். அதனைவிட அதிகமாக அரசியலில் நாட்டம் காட்டினார். முதலில் நீதிக்கட்சியில் சேர்ந்தார் பின்னர் நட்சத்திர பேச்சாளாரால உயர்ந்தார். பின்னர், பெரியாரின் அறிமுகம் கிடைத்து அவரது விசுவாசியாக மாறினார். பெரியார் […]