சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளதாக கூறப்படும் பாமக தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என பாமக மூத்த நிர்வாகி ஜி.கே.மணி முன்னதாக கூறியுள்ளார். இப்படியான சூழலில் இன்று, பாமக மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் பகுதியில் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக […]
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார். அது என்னவென்றால் ” கட்சியின் நிறுவனர் எனும் பொறுப்பில் இருக்கும் நானே, கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் செயல்படுவார். அடுத்தடுத்த முடிவுகள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு செய்யப்படும்.” என […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தற்போது பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ” 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு செயல் திட்டங்கள் உள்ளன. அதனை செயல்படுத்த கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்ய […]
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருந்தாலும், கட்சியை வழிநடத்தும் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இப்படியான சூழலில், ” கட்சியின் நிறுவனர் எனும் பொறுப்பில் இருக்கும் நானே, கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் செயல்படுவார். அடுத்தடுத்த […]
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த ஆண்டு (2025 ஏப்ரல் 1) நிலவரப்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் வரை) மட்டும் 1.24 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ள தாக ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டு இருக்கிறது. இதனையடுத்து, இந்த மாதிரியான சம்பவங்களுக்கு தீர்வு வேண்டும் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் […]
சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளதாகவும் , அப்போது தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஜெயக்குமார் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.மணி (பாமக), திருமாவளவன் (விசிக), […]
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் பாலியல் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. எனவே, பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் தெரிவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து ஆவேசத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தினமும் செய்தித்தாளில் பார்த்து கொண்டு இருக்கிறீர்களா? 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை..இந்த […]
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ” சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை ஜெயிக்க வைத்துள்ளீர்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை எம்.பி. சுதாவை மறைமுகமாக தாக்கி பேசியிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிகவும் காட்டத்துடன் அத்தொகுதி எம்.பி. சுதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கடந்த 23 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நாட்டில் […]
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் பேசியிருந்த அவர் “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதலமைச்சர் சொல்வது கோழைத்தனம் தான். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனமாக செயல்படுகிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் சென்னையில் […]
சேலம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை கடுமையாக கடிந்து கொண்டார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து பேசினார். ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி தற்போது […]
விழுப்புரம் : கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பிற்கு தனது மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமித்து அறிவித்தார். பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுத்ததை மேடையிலேயே கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பா? கட்சியில் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என […]
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பிற்கு தனது மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமித்து அறிவித்தார். பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி , ‘அலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்ளது. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். குணாநிதி எனும் புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாய்கள் மற்றும் மனிதர்கள் […]
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை கண்டித்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் போராட்ட கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ” தமிழக முதலமைச்சர், உடனடியாக வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு அளித்தால், 2026 தேர்தலில் […]
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசு முதலாளிகளின் பக்கம் இருக்கிறது. விளைநிலங்களை அழித்து அறிவுசார் மையங்கள் அமைக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்ட ஒரே கட்சி பாமக தான். […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விக்கு “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என […]
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்ததாகவும், இது ரகசிய சந்திப்பா அல்லது அதிகாரபூர்வ சந்திப்பா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஏதேனும் அறிக்கை வெளியிட்டு கொண்டிருப்பார். […]
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறிவிட்டு சென்றார். Read More-“மு.க.ஸ்டாலின் […]
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னையில் […]
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில் முக்கிய அறிவிப்பாக ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்தார். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. விஜய் இப்படி அறிவித்துள்ள காரணத்தால் மற்ற கட்சித் தலைவர்களிடமும் விஜய் கட்சியுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு […]