விவசாயி மீது தாக்குதல்.. காவல்துறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர்

Amarinder Singh

கானௌரி எல்லையில் காயமடைந்த விவசாயிக்கு எதிராக  தாக்குதல் நடத்திய ஹரியானா காவல்துறைக்கு எதிராக  பாஜக மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கானௌரி மற்றும்  ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளும், மத்திய அரசுக்கும் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முடியாதபடி … Read more

அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை – அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடிய அமரீந்தர் சிங்!

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அம்ரீந்தார் சிங் ராஜா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசியுள்ள ராஜா,  பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஏப்ரல் … Read more

பட்டியாலா தொகுதியில் கேப்டன் அமரீந்தர் சிங் படுதோல்வி..!

பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில்,  பாட்டியாலா  தொகுதியில் போட்டியிட்ட  கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாட்டியாலா  தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் … Read more

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய அறிவிப்பு!

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்க்கு 37 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்து பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு. பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். மூன்றாவது கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) சீட் பங்கீடு … Read more

பாஜகவுடன் கைகோர்த்த பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்!

பாஜகவுடன் கூட்டணி உறுதியானது என்று பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அறிவிப்பு. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்,  அக்கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதன்பின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, புதிய கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அமரீந்தர் சிங் … Read more

காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் அம்ரீந்தர் சிங் ….!

ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் அவர்கள் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை நியமித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் 18 ஆம் தேதி நவ்ஜோத் சிங் சித்து உடன் அம்ரீந்தர் சிங்கிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இவர் தற்பொழுது தனது பஞ்சாப் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பஞ்சாப் லோக் … Read more

#BREAKING: அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு ..!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்பட்ட மோதல்போக்கு காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பின்னர், அமித்ஷாவை சந்தித்து அமரீந்தர் சிங் பேசியதால் பாஜகவில் இணைப்போவதாக கூறப்பட்டது. பிறகு அமிரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அமரீந்தர் சிங் தேர்தலை … Read more

#BREAKING: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனம்!

பஞ்சாப் மாநிலத்தின் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனம். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். உட்கட்சி பூசல் மற்றும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி காரணமாக பதவியை ராஜினாமா செய்தாக கூறப்பட்டது. பஞ்சாபில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற … Read more

#BREAKING: பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங்!

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு … Read more

#BREAKING: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள சீக்கியர்களை மீட்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!!

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களை மீட்க மத்திய அரசுக்கு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தலிபான் கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராவில் சிக்கியுள்ள சுமார் 200 சீக்கியர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப் அரசு, அவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை … Read more