மழைக்கு பிறகு சற்று உயர்ந்த டெல்லி காற்றின் தரம்.. ஆனாலும், மோசமான அளவு தான்.!

Delhi air pollution

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைய எட்டி வருகிறது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கே சிரமப்படும் அளவுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த காற்று மாசுவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிர வாகன கட்டுப்பாடு, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை, தண்ணீர் லாரி மூலம் நீர் பீய்ச்சி அடிப்பது, செயற்கை மழை பொழிவு என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் … Read more

காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்

air pollution

காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (வியாழன்) 460 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI), தற்போது 376 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் பேருந்துகள், லாரிகள், மற்ற மாநில டாக்சிகள் ஆகியவை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தினசரி … Read more

டெல்லியில் காற்று மாசு: நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Delhi school

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை (9 ம் தேதி) முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என அம்மாநில அரசு  அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், … Read more

அதிகரிக்கும் காற்று மாசு.! டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

School Leave - Air Polution in Delhi

தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு , பட்டாசுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்காளாக காற்றின் தரம் மிக குறைந்து காணப்படுவதால், காற்று மாசு அளவானது 350ஐ தாண்டி உள்ளதால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். டெல்லி காற்று மாசுவை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் இன்று மற்றும் … Read more

டெல்லியில் இன்று முதல் டீசல் பேருந்துகள் இயங்க தடை.!

delhi Diesel Bus

தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் பிற மாநிலங்களில் இருந்து இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 30ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருவதாக கூறிய கோபால் ராய், கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக … Read more

டெல்லியில் நவ-1 முதல் டீசல் பேருந்துகள் நுழையத் தடை.!

Diesel Bus

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற மாநிலங்களில் இருந்து வரும் டெல்லியில் இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக … Read more

#JustNow: அக்.1 முதல் 2023 பிப்ரவரி வரை இதற்கு தடை – மாநில அரசு அதிரடி உத்தரவு

கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பு.  குளிர்காலத்தில் மாசுபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க 2022 அக்டோபர் 1 முதல் 28 பிப்ரவரி 2023 வரை நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று, டெல்லி அரசாங்கம், அதன் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் … Read more

டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு….!

டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த பல மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒவ்வொரு மாநிலங்களிலும் திறக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்ட நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அடுத்த அறிவிப்பு … Read more

#BREAKING : டெல்லியில் காற்று மாசு – அரசு அலுவலர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க உத்தரவு..!

காற்று மாசை தடுக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி : சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். … Read more

டெல்லி காற்று மாசு : மருத்துவரின் அறிவுரைப்படி டெல்லியை விட்டு புறப்பட்ட சோனியா! எங்கு தங்குகிறார் தெரியுமா?

டெல்லி காற்று மாசு காரணமாக, மருத்துவரின் அறிவுரைப்படி ராகுல் காந்தியுடன் இணைந்து கோவாவிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. டெல்லியில், கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது.  காற்று மாசு மட்டுமல்லாமல் கொரானா வைரஸ் பரவலும் இந்தியத் தலைநகரான டெல்லியை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காற்று மாசு காரணமாக அவரது உடலில், உடல்நல குறைவு ஏற்படக் கூடும் என்பதால், மருத்துவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காற்று மாசு … Read more