பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை நாளை திறந்து வைக்கிறார்!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, எதிர்கால வளர்ச்சி பாதைகள் மற்றும் மாநிலங்களில் எஸ்.டி.ஐ க்கான பார்வை; உடல்நலம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு; … Read more

#IPL2022: மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல். நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படி நடப்பாண்டு … Read more

#INDvWI: நாளைக்கு இவருடன் சேர்ந்து தான் பேட்டிங்கை தொடங்குவேன் – ரோஹித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில், இவருடன் சேர்ந்து களமிறங்கும் ரோஹித் சர்மா. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் … Read more

அகமதாபாத்தின் ஒரு நாள் கலெக்டராகிய 11 வயது சிறுமி – காரணம் இது தான்!

மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார்.   குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. கடந்த 7 மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த சிறுமி நன்றாக படிக்கக்கூடிய சிறுமி என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாக சிறுமி குறித்து மேக் எ விஷ் பவுண்டேஷன் அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர். … Read more

குஜராத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரின் புற நகரில் உள்ள அறையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் நகரின் புறநகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 20ஆம் தேதி இவர்களின் வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசியத் தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அண்டை வீட்டுக்காரர் கதவை தட்டியபோது, … Read more

மாடர்னா தடுப்பூசியால் கடுமையான ஒவ்வாமை சந்தித்த அமெரிக்க மருத்துவர்.!

மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் அமெரிக்க மருத்துவர் ஒருவர் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவை சந்திதுள்ளார். போஸ்டனில் ஒரு மருத்துவர் கடந்த வியாழக்கிழமை மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற பிறகு கடுமையான ஒவ்வாமை எதிர்வினையை கொண்டுள்ளார் என்று மருத்துவரை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டது. போஸ்டன் மருத்துவ மையத்தின் வயதான ஆன்காலஜி சகாவான டாக்டர் ஹொசைன் சதர்சாதே, தடுப்பூசி போடப்பட்ட உடனேயே அவருக்கு கடுமையான எதிர்வினை ஏற்பட்டதாகவும், மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது … Read more

கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைன் பதிவு அகமதாபாத்தில் தொடக்கம்.!

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குடிமை அமைப்பு, முன்னுரிமை குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து வீடு கணக்கெடுப்பு அல்லது நகர்ப்புற சுகாதார மையங்களில் (யு.எச்.சி) சுகாதார ஊழியர்களுடன் தங்களை பதிவு செய்யாத நகரத்தின் முன்னுரிமை குழுக்களின் குடிமக்கள் தங்களை www.ahmedabadcity.gov இல் பதிவு செய்யலாம். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆகியோருக்கான பதிவு செயல்முறையை … Read more

#BREAKING: ஐ.பி.எல் தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள் – பிசிசிஐ

ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுகூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு … Read more

அகமதாபாத்:தூணில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து .!2 பேர் காயம் .!

குஜராத் அகமதாபாத்தில் பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து மோதி 2 பேர் காயமடைந்துள்ளனர். குஜராத் அகமதாபாத்தில் உள்ள அக்பர்நகர் பகுதியில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அக்பர்நகர் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து ஒன்று மோதியுள்ளது .இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாக நொறுங்கியது . இந்த விபத்து தொடர்பாக அகமதாபாத்தின் பி.ஆர்.டி.எஸ் பொது மேலாளர் கூறுகையில், விபத்து நடந்த போது பேருந்தில் யாரும் இல்லை … Read more

அகமதாபாத்தை “மினி பாகிஸ்தான்” என அழைத்த விவகாரம்: சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்!

அகமதாபாத்தை “மினி பாகிஸ்தான்” என கூறியதற்கு குஜராத் மாநில மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் விசாரித்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் … Read more