Tag: #Accident

மதுரை திருப்பரங்குன்றத்தில் MCA இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் MCA பட்டப்படிப்பு இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் இறந்த அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் அம்மாணவியின் இறந்த பின்புலம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

#Accident 1 Min Read
Default Image

புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நள்ளிரவில் இருவர் உயிரிழப்பு; 177பேர் காயம்……

  சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது தடுப்புச் சுவரில் மோதித் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆவடி இஎஸ்ஐ அண்ணாநகரைச் சேர்ந்த பால் என்பவர் ஆவடி பேருந்து பணிமனை எதிரே சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட சாலை விபத்துக்களில் 177பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 84பேர் ராயப்பேட்டை, சென்ட்ரல், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், […]

#Accident 2 Min Read
Default Image

அரசுபேருந்து-ஆட்டோ மோதி 5 மாணவர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் அருகே ரேப்பூடி எனுமிடத்தில் பள்ளிக்கு சென்ற ஆட்டோ ஒன்றும் அரு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. source : dinasuvadu.com

#Accident 1 Min Read
Default Image

வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் சாலையில் விபத்து 9 காயம் ; 2 பேர் பலி

வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் சாலையில் அரசு பேருந்து, கார் மற்றும் ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. ஆட்டோவில் வந்த பள்ளி மாணவர்கள் 9 காயம் அடைந்துள்ளனர்.மேலும் தருண், காளிதாஸ் ஆகிய 2 பேர் இந்த விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.

#Accident 1 Min Read
Default Image

தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 5 பேர் பலி…!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

#Accident 1 Min Read
Default Image

திருச்செந்தூர் முருகன் கோயில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுற்று புறத்தில் உள்ள மண்டப மேற்புறசுவர் இடிந்து விழுந்து, ஒரு பெண்மணி உயிரிழந்தார். சிலர் காயமுற்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இடிந்து விழுந்த மேற்புற சுவர் மற்றும் சுற்று சுவர் முழுவதும் இடிக்கப்பட்டு கல்மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதனால், தற்போது அதனை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#Accident 2 Min Read
Default Image
Default Image

அமெரிக்காவில் இரயில் விபத்தில் 3 பேர் இறந்தனர்.

 அமெரிக்கா; வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு விபத்திற்க்கு உள்ளானது  இதில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவின் வாஷிங்டன் மாணத்தில் உள்ள டாகோமா பகுதியில் இருந்து ஒலிம்பியா சென்று கொண்டிருந்த இந்த  ரயில் ஆனது  நெடுஞ்சாலை பாலத்தை கடக்கும் போது திடீர் என  விபத்துக்குள்ளானது  ரயில் ஒரு பெட்டி பாலத்திற்கும் ரோட்டற்கும் இடையே அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது… sources; dinasuvadu.com

#Accident 2 Min Read
Default Image

சமயபுரம் அருகே விபத்து : 13 பேர் காயம்

திருச்சி, சமயபுரம் அருகே கூத்தூரில் வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 13பேர் காயமடைந்தனர். இவர்கள் பழனி கோயிலுக்கு வேனில் சென்றவர்கள். கோயிலுக்கு சென்று விட்டு சேத்தியாதோப்புக்கு திரும்பும்போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ள்ளது.

#Accident 1 Min Read
Default Image