#BREAKING: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.!

புதுச்சேரியில் கொரோனாவால் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று உயிரிழந்தார். புதுச்சேரி முன்னாள்அமைச்சர் 53வயதான ஏழுமலை கொரோனாவால் உயிரிழப்பு இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநர் எஸ் மோகன் குமார் தெரிவித்தார். இவர் 2001 ல் அப்போதைய முதலமைச்சர் என் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சகத்தில் நிர்வாக அமைச்சராக இருந்தார். மேலும் புதுச்சேரி வேளாண் சேவைகள் மற்றும் தொழில்துறை கழகத்தின் தலைவராகவும் எலுமலை இருந்தார்.