20 வயது பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இந்த இளம் வயதில் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். … Read more