உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றம் – வெளியுறவுத்துறை

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

# சிக்கிதவிக்கும்- 40 மீனவர்கள்# வெளியுறவுதுறைக்கு முதல்வர் கடிதம்

சிக்கி தவிக்கும் 40 இந்திய தமிழக  மீனவர்களை  மீட்க வேண்டும் என்று  வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்த கடிதம்: ஈரானில் சிக்கியிருக்கும் 40 இந்திய தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். 681 இந்திய தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்ததற்கு வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி  நன்றியையும் உடன் தெரிவித்தார் .