Tag: வலைகள் மற்றும் படகுகளை தயார்ப்படுத்தும் பணியில் மீனவர்கள்

வலைகள் மற்றும் படகுகளை தயார்ப்படுத்தும் பணியில் மீனவர்கள் ..!

புதுச்சேரியில் மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய உள்ளதால் வலைகள் மற்றும் படகுகளை தயார்ப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 60 நாட்கள் அமலில் இருந்த தடைக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக கடலுக்குச் செல்ல ஆயத்தமாகும் விசைப்படகு மீனவர்கள், படகுகளை பராமரிப்பதுடன், வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக் கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலைகள் மற்றும் படகுகளை தயார்ப்படுத்தும் பணியில் மீனவர்கள் 2 Min Read
Default Image