வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை:முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது,வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது.இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்,வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கி இருப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,தற்போது ஆலோசனைக் […]