3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் கல்லா கட்டிய ரயில்வேத் துறை.! எப்படி தெரியுமா.?

Indian Railways

IRCTC : இந்தியன் ரயில்வேயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து அதனை பயண நேரத்தின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் , நேரத்திற்கு தகுந்தாற்போல அதன் சேவை (அபராத) கட்டணம் வசூல் செய்யப்பட்டு மீதம் உள்ள டிக்கெட் பணம் பயனர்களுக்கு திரும்பி தரப்படும். அப்படி வசூலித்த சேவை கட்டணம் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் 1,229 கோடியாக உள்ளதாம். மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை (RTI) … Read more

பாம்பன் பாலத்தில் IIT பொறியாளர்கள் ஆய்வு.! டிசம்பர் 31 வரையில் ரயில் செல்ல தடை.!

பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. –  ரயில்வே துறை. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் படி, தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து … Read more

இனி ரயில்களில் போர்வை, கம்பளிகள்-ரயில்வே துறை அறிவிப்பு..!

ரயில் பயணிகளுக்கு பெரும் நற்செய்தி  நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்யும்போது வழங்கப்பட்டு வந்த போர்வை, கம்பளிகள் வசதிகளை மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில்வே சார்பில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும்  படுக்கைகள் வழங்கப்பட்டு வந்தது. ரயில்வே வழங்கிய இந்த வசதி 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அளித்த உத்தரவில், ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும்  படுக்கைகள் … Read more

# 100 % மின்மயமா’கிறதா? இரயில்வே-பியூஸ் பேச்சு

இந்திய ரயில்வேயை 100% சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்தியரயில்வே துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில்  பங்கேற்றஅமைச்சர் பியூஷ்கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகையில்:   இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,20 ஆயிரம் கி.மீ தூரம் முழுவதையும் 100 சதவீதம் அளவிற்கு மின்மயமாக்கல் முறைக்கு  பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார். எனவே வரும் 2030 ம் ஆண்டில் முதல் 100 சதவத பசுமை … Read more

ரயில்வே துறையின் புதிய அதிரடி திட்டம்..!

ரயில்வே துறை  தற்போது புதிய பல திட்டங்களை கொண்டுள்ளது.அதில் ஒன்றான ஆப்பரேசன் சுவர்ண் என்னும் திட்டத்தின் கீழ் ராஜதானி, சதாப்தி ரயில்களின் பெட்டிகளை ரயில்வே துறை தரம் உயர்த்தி வருகிறது. இந்திய ரயில்வேயில் ராஜதானி எனப்படும் நெடுந்தொலைவு ரயில்களும், சதாப்தி என்னும் குறுகிய தொலைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மற்ற விரைவு ரயில்களைவிடக் கூடுதல் கட்டணம் பெறப்படும் அதேநேரத்தில், பயணிகளுக்கான வசதி குறைந்துகொண்டே வருகிறது. இதையடுத்து 14ராஜதானி, 15சதாப்தி ரயில்களை ஒவ்வொன்றையும் 50லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்துத் … Read more