முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் பிப்., 28ம்தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று கூறி பாஜகவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்தப் புகார் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேசிய பட்டியலின ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையத்தின் துணை தலைவர் முருகன் உத்தரவிட்டி இருந்தார். […]