பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மருத்துவ முகாம்கள் : அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் […]
புயலை எதிர்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மான்டேஸ் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த […]
எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பை கொடுப்பது தான் அரசின் கடமை.- தமிழிசை சவுந்தராஜன். கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்ள சென்றார் அப்போது அங்குள்ள லிஃப்ட் சரியாக பராமரிக்காத காரணத்தால் பாதியில் நின்றது. இந்த சம்பவம் அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உதவி பொறியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை குறிப்பிடும் வகையில் […]
ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது. – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பேசினார். அதில் , பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த தவறு தவறு இனி நடக்காமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் மழைக்காலத்தில் மக்களை காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காக்க, எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் , பொதுமக்கள் சுகாதாரத்தத்திற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதில் இருந்து, தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுமார் 11 ஆயிரம் மருத்துவமனைகளை தாண்டி, புதியதாக […]
தமிழ்நாட்டில் நேற்று 1604 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள். இன்று திருநெல்வேலியில் 107 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது பரவி வரும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்க தமிழகஅரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ‘ இன்று திருநெல்வேலியில் மொத்தமாக 107 […]
பணி நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் பிரசவத்தின் போது, குழந்தை இறந்துள்ளது. இது தொடர்பாக, மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், சூனம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு பெண் தன் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் அந்த நேரம், பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத காரணத்தால், செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. […]