ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு, இத்தகைய அவமானம், தியாகத்தின் பொருள் தெரியாதவர்களால் மட்டுமே செய்ய முடியும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு ஜாலியன்வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நினைவுச் சின்னத்தில் உள்ள டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிலையில், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பித்ததன் மூலம், அவதித்துள்ளதாக […]
ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.இது தொடர்பாக நகாவுர்,பாலாஜி காவல் நிலையம் போலீசார் கூறுகையில்,இந்த விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேர் பலத்த […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித்-க்கு முதல்வர் வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தங்கம் பதக்கம் வென்றார். இவர் 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் […]
டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்றதற்கு பிரதமர் மோடி,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வதுபாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில்,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார். அவரைத் […]
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதன்படி,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென்,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக […]
பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில்,இதற்காக உழைத்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜன்தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். அதன்பின்னர்,இந்தத் திட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. பிரதமரின் இந்த ஜன்தன் யோஜனா திட்டம் என்பது,வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு மற்றும் மக்களுக்கு நிதி சேவைகள் கிடைக்கச் […]
வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பீஹாரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003ம் – 2004ம் ஆண்டில் மத்திய அரசானது ஒப்புதல் அளித்தது. ரூ.516 கோடி மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப் பட்டிருந்த இப்பாலத்தின் கட்டுமான பணிகள் ஆனது கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து […]
பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவு கோரிக்கை ஏற்று கோயமேடு காய்கறி மற்றும் பழமார்கெட் நாளை மறுநாள்(ஞாயிறு) அன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்றும் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில் செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரம் 67 ஆண்டுகளில் எதுவுமே நிகழவில்லை என்று கூற முடியாது. ஆனால், ஏழை, […]
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நக்சலைட்டுகளின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு வளர்ச்சி ஒன்றே பதில் என்று தெரிவித்துள்ளர். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக சட்டிஸ்கர் மாநிலத்திற்கு சென்றார். நயா ராய்புரில் அவர் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நயா ராய்புரைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பிஹாலிக்குப் புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு பிஹாலி ஸ்டீஸ் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து ஜெயந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய […]
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்றார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைத்த அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார். அதன்பின்னர், ஜகதல்பூர் – ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைத்த அவர், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். அங்கிருந்து பிலாய் நகருக்கு சென்ற மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் […]
வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :- காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது. தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை […]
பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது தேர்தல் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது. சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேசும் இந்த மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் தான் முதல்முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்றன. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சிறப்பு […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இந்நிலையில், குவின்காடோ நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரஷித் அலிமோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு […]
பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை செயலக அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீர்கள் (எஸ்.பி.ஜி.) மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் (சி.பி.ஜி.) ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் மிரட்டலைத் தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு […]
கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். ஆளுநர் மாநாடு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார். அதே காரில் பயணம் செய்த மற்றொருவர் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் அவர் மனைவி ஜசோதாபென்னும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜசோதாபென்னும் அவர் உறவினர்களும் ஒரு காரில் பரண் என்னுமிடத்தில் இருந்து உஞ்சா என்னுமிடத்துக்குச் சென்றுள்ளனர். ராஜஸ்தானில் கோட்டா – சித்தூர் நெடுஞ்சாலையில் கார் சென்றபோது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசோதாபென் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். அவர் உறவினரான […]