சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மை காவலர்கள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் சிறிய மோட்டாா் பொருத்திய தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், ட்ரோன் கருவி மூலம் வானில் பறந்தபடியே ஆள்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. ட்ரோன் மூலம் […]