சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று மாலை விடுதலைச் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் விடுதலையானதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வந்தனர். திமுக தொண்டர்களின் வெற்றி கோஷங்களுக்கு இடையே புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்வார், எங்கு செல்வார், […]