அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பை சிறுவனை கழற்ற சொன்ன விவகாரத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த மாணவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு மாணவர்களில் ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் […]