உலகில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி ‘கொரோனா’ வைரஸை விரட்ட, நேற்று(மார்ச் 22) நாடு முழுவதும் நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. நேற்று , இந்திய சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி ஒத்துழைப்பு அளித்தனர். நேற்றைய ஊரடங்கின் போது, மருந்து கடையினர் சேவை மனப்பான்மையுடன், […]