சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம் குறித்து, சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட். சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ராகுல் காந்தி, ஜோதிமணி எம்.பி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் […]