Tag: சட்டப்பேரவை

வேளாண் பட்ஜெட்… பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு..!

சட்டப்பேரவையில் 4-வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது” 2022-23-ஆம் நிதியாண்டில் பயிர் கடனாக 13,442 கோடி ரூபாய் 17 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 -24 நிதியாண்டில் 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 13 ஆயிரத்து 600 கோடி […]

Agriculture Budget 5 Min Read
Panneerselvam

வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுமார் 1 மணி நேரம் 57 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். இந்த வேளாண் பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரிப்புகள் மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார். […]

#TNAssembly 5 Min Read
graduates

10 வேளாண் விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!

10 வேளாண் விளைப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  பேசிய அமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை ஏற்றுமதி அளவு  அதிகரிக்கும். மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..! எனவே நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் […]

Agriculture Budget 3 Min Read
Flame lily

விவசாயிகளே! பயிர் காப்பீடு, நெல் கொள்முதல், கரும்பு சாகுபடி… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், விவசாயிகளுக்கு மானியம், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-2024 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடியும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடியும் ஒதுக்கீடு […]

#Farmers 5 Min Read
agricultural budget 2024

மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..!

சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் “ஆடாதொடா,நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும், வயல் பரப்புகளிலும்  நடவு செய்திட  ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  பழங்காலத்தில் நம் தமிழர்கள் நல்ல உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருந்தன. இதனால் நல்வாழ் வாழ்ந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல  சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் 2024-25 […]

Agriculture Budget 4 Min Read
Nel Jayaraman

2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம். தமிழக வேளாண் பட்ஜெட் பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு […]

#Farmers 13 Min Read
TNAgriBudget2024

விரைவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி […]

#Farmers 4 Min Read
farmers

2 லட்சம் விவசாயிகள் பலன்பெற மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி..!

சட்டப்பேரவையில்2024-25-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்” வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  பயிர் வகைகள், கொப்பரை தேங்காய் ஆகியவையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செயல்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கரும்பிற்கு ஒரு மெட்ரிக் டன் ஊக்கத்தொகையாக 195 ரூபாய் விதம் 260 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட ஏதுவாக […]

Agriculture Budget 5 Min Read
Panneerselvam

கூடுதல் மானியம்! ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டத்திற்கு 206 கோடி ஒதுக்கீடு..!

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பின், பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக அமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதில் அமைச்சர் கூறியதாவது, 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அறியவிக்கப்பட்ட திட்டங்கள் செயப்படுத்தப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட பலன்களை தந்துள்ளது. நீண்ட கால திட்டங்களுக்கான பணிகள் தகுந்த மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]

#TNAssembly 5 Min Read
mannuyir thittam

வேளாண் பட்ஜெட்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்பு…!

சட்டப்பேரவையில் 4-வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்  தாக்கல் செய்து வருகிறார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர்  உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “வேளாண்மை துறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து வேளாண் உற்பத்தியுடன் நின்று விடாமல் உழவர் பெருமக்களின் நலன் முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் வேளாண் தற்போது உள்ள சவால்களை சாதனைகளை மாற்றி […]

Agriculture Budget 4 Min Read
Panneerselvam

விவசாயிகளை கவரும் வகையில் வேளாண் பட்ஜெட்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சூழலில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி, வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே […]

#TNAssembly 4 Min Read
MRK PANNEERSELVAM

இன்று சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் நடைபெற்றது. இந்த முதல் நாள் கூட்டம் நடைபெற்ற பின்னர் நடந்த அலுவலக கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு 19ஆம் தேதி 2024 2025 ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் என  அறிவித்தார். அதன்படி நேற்று  தமிழக சட்டசபையில் 2024 -25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணியளவில் நிதி […]

Agriculture Budget 4 Min Read
Agricultural Budget

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி, பதில் நேரம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் வந்தனர். இதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் பதிலுரை ஆற்றினார். அப்போது கூறியதாவது, தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளுன் சிந்தித்து செயல்படுகிறேன்.  அரசின் உரையை […]

#TNAssembly 4 Min Read
mk stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்.! 

தமிழக சட்டப்பேரவையில் இன்று 3வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு தனி தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிரானது. மற்றொன்று மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதற்கு எதிரானது. தொகுதி மறுவரையறை : மத்திய அரசானது மக்கள்த்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளையும் மறுசீராய்வு செய்து புதிய மக்களவைத் தொகுதி பட்டியலை தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது. மக்கள் தொகை […]

#TNAssembly 9 Min Read
Today TN Assembly Live

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனையடுத்து, […]

rummy 3 Min Read
Default Image

பரந்தூரில் ஏன் விமான நிலையம் வர வேண்டும்.? சட்டப்பேரவையில் தமிழக அமைச்சர் விளக்கம்.!

பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக […]

tangam thennarasu 7 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி..!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். […]

ragupathi 2 Min Read
Default Image

3ஆம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடர்.! எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்.!

நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி முதல் நாள் இரங்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. நேற்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை ஆகியவை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதே போல நேற்று ஹிந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே போல எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பான பிரச்சனை காரணாமாக வெளிநடப்பு செய்தனர் அதன் […]

#ADMK 3 Min Read
Default Image

ஆன்லைன் விளையாட்டு தடை – சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்கிறார் முதல்வர்..!

சட்டப்பேரவையில், இன்று ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை […]

#MKStalin 2 Min Read
Default Image

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்கதிட்டமிட்ட படுகொலை அரங்கேறியது உறுதியாகியுள்ளது! – மநீம

நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மநீம அறிக்கை.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மநீம, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த […]

#MKStalin 5 Min Read
Default Image