சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில், “கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்” மதநல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சார்ந்த முகமது ரபி என்பவருக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரை சேர்ந்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கம் பதக்கம் ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒருவருக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த […]