ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சூரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடமும் கடந்த 20ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு! […]
நடிகர் சத்யராஜின் இளைய சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவரது சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர், காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கல்பனா மன்றாடியார் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலன்க; பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.