ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டு என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றிருந்தாலும், போட்டித்தேர்வு வைக்கப்படும் என்ற முடிவை கைவிட வேண்டும் எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கணக்கானோர் சென்னையில் போராட்டம் நடத்தினர். தற்போது […]
10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மை நகரங்களின் பட்டியலில் மொத்தம் 45 இடங்களில் 42வது இடத்தில் கோவை, 44வது இடத்தில் சென்னை, 45வது இடத்தில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து, ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் சார்பில் தூய்மை நகரங்கள் பற்றிய வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில், ‘ சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க […]
நான் ஓபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளது பற்றி அவர் தான் கூற வேண்டும். என சசிகலா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் தனது ஆதரவாளர்களை இன்று சசிகலா சென்னையில் உள்ள தனது வீட்டில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, செய்தியாளர்கள், ஓபிஎஸ்-ஐ எப்போது சந்திக்க உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ‘ அதனை பற்றி அவர் தான் கூற வேண்டும். அதிமுகவில் பிரிந்தவர்கள் இரு அணி எல்லாம் ஒன்று தான். […]
தற்போது வெளியான உச்சநீதிமன்ற உத்தரவின் படி, எங்களை இதுவரையில் ஸீரோ என்று கூறி கொண்டிருந்தவர்கள் முன்னாடி இப்பொது ஹீரோவாக மாறியுள்ளோம் என ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தனர். ஜூலை 11 பொது குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, வழக்கை வரும் நவம்பர் 21ஆம் […]
தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் வைரலானது. அதில் தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் தொனியில் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா பேசியிருப்பார். அதுகுறித்து, தனது கண்டங்களை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடுகையில், ‘ அரசு அதிகாரிகளை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் […]
தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் ‘ப்ளு’ காய்ச்சல் பரவுவதை தடுக்க புதுசேரியை போல தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என ஓ.பன்னேர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனாவை போல, தற்போது ப்ளூ காய்ச்சல் தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுசேரியை போல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் […]
ஜூலை 11இல் அதிமுக அலுவலகம் ஓபிஎஸ் ஆதரவாளர் குளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாக்குமூலம் அளித்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகம் மற்றும் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த கலவரம் தொடர்பாக, இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் ஆதரவாளர் கொடுத்த புகார் உட்பட 4 புகார்கள் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் இருந்த […]
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி ஓபிஎஸிடம் கேட்கப்பட்டபோது, ‘ அரசு அவர்கள் கடமையை செய்கின்றனர். குற்றமட்டவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.’ என தனது கருத்தை தெரிவித்தார். இன்று தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது, அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் […]
சென்னையில், பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த பெரியார் புகைப்படத்தை இபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றதால், அமமுகவினர் வைத்திருந்த பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ். இன்று தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் கொண்டாப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியினர் தங்கள் மரியாதையை பெரியார் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர். பலர் சமூக வலைத்தளம் மூலம் பெரியாரின் கருத்துக்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை அண்ணாசாலையில் […]
ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் ஆவின் இனிப்பு பொருட்களின் விலை அண்மையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, ‘ ஆவின் நிறுவனத்தால் […]
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக சார்பிலும் கேவியெட் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூலை 11 நடந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி வருகிறது. சென்னை நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் எனவும் மாறி மாறி தீர்ப்பளித்தனர். தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே […]
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார். தமிழக அரசியலில் மிக முக்கிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக தற்போது இரு பிளவாக பிளவு பட்டு இருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு ஒரு புறம் இபிஎஸ் தரப்பு ஒருபுறம் என இருவரும் கட்சி பிரச்னையை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த […]
நெய்வேலியில் தேர்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை இது குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நெய்வேலியில் இயங்கி வரும் நவரத்னா நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அண்மையில் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பேர் அனைவருமே வெளிமாநிலத்தவர்கள். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், ‘ ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களில் 75% அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவராக […]
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக ஆஜராகி பதில் அளித்தார். கடந்த 2 நாட்களாக 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்,2 நாள்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த பின் சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி […]
நான் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று காலை 11.40 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணி வரை முதற்கட்டமாக நடைபெற்றது. இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், […]
ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது போடி நாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்த தேர்தலுக்கான வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் சொத்துக்கள் கடன் விவரங்களை மறைத்ததால் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வாக்காளர் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு நிராகரிப்பு: மிலானி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் […]
கர்நாடக மாநிலத்தில் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே. சித்தராமையா ஒரு வாரத்திற்கு முன்பு கூறிய நிலையில், இன்னும் ஒருபடி மேலே சென்று […]
அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் அவர்களது உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் திரு. பாலசேகரன் என்பவரின் மகனான சஷ்டிகுமார் பாலசேகரன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும்,15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது,சஷ்டிகுமார் […]
மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் அதிமுக ஆட்சியிலேயே,புரட்சித்தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சூட்டப்பட்டு,சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில்,மறைந்த திமுக தலைவர் தான் பெயர் சூட்டினார் என்றவாதம் வடிகட்டின பொய்,அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்று ஓபிஎஸ் குற்றச்சாட்டு. சென்னை கிண்டியிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான,வரலாற்றை திரித்து எழுதும் செயலாகும் எனவும்,இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவரை சிறுமைபடுத்துவது […]
வட மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்திருப்பதும், பொட்டலங்களில் இந்தி வார்தைகள் இடம்பெற்றிருப்பதும் கண்டனத்திற்குரியது இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் தி.மு.க., தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் […]