அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை பெற்றார்கள். அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பொருத்தவில்லை. மேலும் , அதிமுக பெயர் பதியப்பட்ட லெட்டர் பேட் பயன்படுத்தவில்லை. ஆனால், ஓபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்னும் அதிமுக கொடியை தனது வாகனத்தில் […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் […]
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. இதன்பின், கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். இபிஎஸ் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்படும் சமயத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று […]
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவகற்கு, நகர்ந்து ஊர்ந்து முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க எந்த யோகிதையும் கிடையாது. – கோவை செல்வராஜ் விமர்சனம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். காலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். எதிரிகள் […]
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனால் மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உட்பட ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வருகின்றனர். ஏற்கனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுடன் வந்து மரியாதை செலுத்திவிட்டு தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துவிட்டு சென்றார். அதனை […]
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள […]
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவை அளித்து இருந்தனர். இதில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பு பதில் அளித்து இருந்ததால், […]
அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பாஜக, பிரதமர் மோடி சந்திப்பு, டிடிவி.தினகரனுடன் கூட்டணி என பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தலைமையில் பிரச்சனை இருப்பது போல பிம்பம் உருவாக்கப்படுகிறது என கூறினார். மேலும், அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவிலை. பாஜக இதற்கு காரணமில்லை என பாஜக பற்றிய கேள்விக்கு […]
தமிழக ஆளுநர் தேவையில்லை என கூற இந்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கொள்கைகள் பற்றி பேசுகிறார். சட்ட அமைப்புக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் அவரை பதவி விலக கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் மூலமும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு குரல்களும் , எதிர்ப்பு குரல்களும் வலுத்து […]
தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு ஓபிஎஸ் பசும்பொன்னிற்கு வந்து மரியாதை செலுத்த உள்ளார். இபிஎஸ் தரப்பில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மட்டும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள உள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர் வந்து […]
கோவை கார்விபத்து குறித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை செய்யும் அளவுக்கு பூதாகரமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்தும், தமிழக சட்ட ஒழுங்கு பற்றியும், ஓ.பன்னீர்செல்வம் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுகவால் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர உள்ளதாக கேள்வி படுகிறேன். அதனால் அதன் மீது கருத்து கூற முடியாது. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறினார். வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக அதிமுக கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணியினராக இருப்பதால், இரு தரப்புமே தங்க […]
ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோவம் வந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார். – என ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஓபிஎஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது நேற்று சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவன் மரணம் தொடர்பான உண்மைகளை அறிய விசாரணை மேற்கொள்ள நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைய […]
தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக முழு மனதாக ஆதரவு தெரிவிக்கிறது. – ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பேச்சு. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். […]
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் […]
இரட்டை இல்லை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுக வரலாற்றிற்கு ஓர் கரும்புள்ளி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், […]
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், உட்கட்சி பிரச்சனையை பேசக்கூடாது எனவும், தொகுதி சார்ந்த பிரச்னையை மட்டும் பேச வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ் ரகசிய உத்தரவு போட்டதாக தகவல் கசிந்துள்ளது. இம்மாதம் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடைபெறுவதை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நேற்று […]
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளரக்ள் கலந்துகொண்டுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை இம்மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை சட்டசபை சபாநாயகர் அப்பாவு அண்மையில் தெரிவித்தார். கடந்த முறை சட்டசபை கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி தலைவராக இபிஎஸ் துணை தலைவராக ஓபிஎஸ் இருந்தனர். அருகருகே இருக்கை அமைக்கப்பட்டது . தற்போது இரு தரப்பும் தனி தனியாக பிரிந்து விட்டதால், இபிஎஸ் தரப்பு, நீதிமன்ற தீர்ப்பு […]