இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு, மன்னார் வளைகுடா பகுதியில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதி மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, கடலோர காவல்படையினர் சந்தேகத்தில் பேரில் படகை நிறுத்துவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனடியாக கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துவந்தனர். அதன் பிறகு தற்போது மேல்சிகிச்சைகாக மதுரை அரசு […]