கோவையில், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் […]