காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை […]
தமிழகத்தில் முன்னதாக அதிமுக அட்சியில் அமைச்சராக இருந்தபோது சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,இது தொடர்பாக 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதற்கட்ட அறிக்கை: இதனையடுத்து,தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு […]
கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடி முடக்கம்: இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச […]
திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது என விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், அஇஅதிமுக ஆட்சியில் தான், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்காக அதிகரித்தது எனும்போது, திமுக ஆட்சியை கல்விக்கு பொற்காலம் என்பது நகைப்புக்குரியது என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது […]
இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ். மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
மதுரை மாநகராட்சிக்கான நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்ய இருந்த நிலையில்,மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களும் அறிஞர் அண்ணா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில்,திமுக கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனையடுத்து,உரிய இருக்கைகளில் அமர வேண்டும் என மாமன்ற செயலாளர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார். ஆனால்,அதனை மீறியும் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குவாதம் […]
சமீப காலமாக வி.கே. சசிகலா கடந்த ஆன்மீகப் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி,கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய சசிகலா,தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார். அவ்வப்போது சசிகலாவின் ஆன்மிக பயணம் ஒரு அரசியல் பயணமாகத்தான் பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,தென் மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா,சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி […]
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.அந்த வகையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. உழைப்பு தொடரும்: இதனை முன்னிட்டு “இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக இருக்க விரும்புவதை விட,இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியது,எனவே அதற்கான எனது உழைப்பு தொடரும், இடர்பாடுகளை நீக்கி […]
கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை தலைமை செயலக காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,கஞ்சா மற்றும் கத்தியுடன் விக்னேஷ்,சுரேஷ் என்பவர் பிடிபட்ட நிலையில்,அதன்பின்னர்,போலீஸ் விசாரணையில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து […]
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் சற்று முன்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும்,கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து,கைதி விக்னேஷ் மரணத்தில் தொடர்புடைய காவலர்கள் […]
பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், […]
ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஓபிஎஸ் ட்வீட் நாளை நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார். ரமலான் மாதத்தில் […]
கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் விரும்ப மாட்டார்கள். திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் […]
இலங்கைக்கு நிதியுதவி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவை […]
சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம். பல வருடங்களாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலம் புறநகர் மாவட்ட இணை செயலாளராக திருமதி.ஈஸ்வரி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர்,முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக […]
காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? என கேள்வி எழுப்பி, ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘சென்னை, புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் 19.4.2022 அன்று இரவு நடைபெற்ற வாகன தணிக்கை சோதனையில், ஆட்டோவில் பயணித்த விக்ணேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்த போலிசார் அவர்கள் இருவரிடமும் கஞ்சா, கத்தி […]
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் பொதுச்செயலாளரின் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி […]
தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது தெளிவாகிறது என ஓபிஎஸ் ட்வீட். நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த […]