ஓபிஎஸ் மேலுமுறையீடு செய்துள்ள அதிமுக பொதுக்குழு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உத்தரவை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. இந்த மேல்முறையீட்டு விசாரணையினை அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வருவதால் அந்த விடுமுறைகள் கழித்து விசாரணையை தொடங்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி […]