அசாம் மாநிலம் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்துள்ளது. அதனால் மாநிலங்களில் பாதிப்புக்கு ஏற்றவாறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள கொரோனா பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. […]
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கனமழை காரணத்தினால் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இதுவரை அம்மாநிலத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வரை வெள்ளப்பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலத்தின் பதினாறு […]
இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.