Tag: டிடிவி தினகரன்

மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம் – டிடிவி

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரன் வாழ்த்து.  இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத்திறனாளிகளை மதித்து நடத்திடுவோம். உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில் அவர்கள் சாதனைகள் புரிந்திட ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திடுவோம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் […]

டிடிவி ட்வீட் 3 Min Read
Default Image

கல்வித்துறையில் மட்டும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப் போல குழப்ப ரேகைகள் தொடர்வது ஏன்? – டிடிவி தினகரன்

தவறு சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுமா? தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை ஒதுக்கியது குறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை மட்டும் ஒதுக்கியது ஏன்? கணினி பயன்பாடின்றி […]

ttv 3 Min Read
Default Image

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? – டிடிவி தினகரன்

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? என டிடிவி தினகரன் ட்வீட். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு […]

#DMK 5 Min Read
Default Image

மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது – டிடிவி தினகரன்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. பிரதமர் மோடி அவர்கள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக […]

ttv 5 Min Read
Default Image

“தொடரும் கொடுமை;முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக இதை செய்ய வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தவிர்க்க நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து,மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு,  கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

- 7 Min Read
Default Image

“இதையும் தி.மு.க அரசு வேடிக்கை பார்க்க போகிறதா?,முதல்வர் என்ன செய்ய போகிறார்?” – டிடிவி தினகரன் கேள்வி!

தமிழகம்:முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஆனால்,அதன்பிறகு மரம் வெட்டுவதற்கு தந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. இந்நிலையில்,தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை […]

#AMMK 6 Min Read
Default Image

“சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்;இபிஎஸ் பலவீனமாகவுள்ளார்” – டிடிவி தினகரன்!

ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக கட்சியை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மூன்று நாட்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, […]

#EPS 6 Min Read
Default Image

‘அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை’ – டிடிவி தினகரன் தீபாவளி வாழ்த்து!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நவம்பர் 4 ஆம் தேதியான நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவுள்ளது.இதனை முன்னிட்டு நேற்று சசிகலா,அதிமுக பொதுசெயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில்,மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி […]

#AMMK 5 Min Read
Default Image

தமிழகத்தின் 126 ஆண்டுகால உரிமை பறிபோனதா? -முதல்வருக்கு டிடிவி தினகரன் 6 கேள்விகள்!

உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும்,உறுதித் தன்மையை தெரிந்து கொண்டு 152 அடி வரை தண்ணீரை  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் , ஆனால்,கேரள அரசு அளித்த தவறான தகவல்கள் உண்மைக்கு புறம்பாக எழுப்பி வரும் பிரச்சனைகளுக்கு அடிபணிந்த தமிழக அரசு, தண்ணீர் 138 அடியை எட்டும் முன்பே, […]

#Kerala 11 Min Read
Default Image

“எதிர்க்கட்சியின்போது விவசாயத்திற்கு ஆதரவு;ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதிராக கையெழுத்து” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!

வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டும்,ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்துள்ளதாக அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது […]

- 5 Min Read
Default Image

நவ.6,7,8 ஆகிய தேதிகளில் அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – டிடிவி தினகரன் அறிவிப்பு..!

நவ.6,7,8 ஆகிய தேதிகளில் அமமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளார். அமமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவிப்பு விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழவைத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் […]

#AMMK 4 Min Read
Default Image

பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது – டிடிவி தினகரன்

விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள்.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை […]

#DMK 4 Min Read
Default Image

அது வெறும் டெண்டர் படை..எங்கிட்ட இருப்பது தொண்டர் படை..அது இல்லேனா?? பழனிச்சாமிக்கு என்னாகும்!மக்களுக்கு தெரியும்!

அமமுகவில் இருப்பது தொண்டர் படை ; எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை என்று என்று  தினகரன் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமமுக இருக்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று  கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிச்சாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் […]

அதிமுக 3 Min Read
Default Image

எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை : டிடிவி தினகரன்..!

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் […]

எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை : டிடிவி தினகரன்..! 4 Min Read
Default Image

அதிமுக.வில் அவர் உறுப்பினர் கூட திவாகரன் கிடையாது.! டிடிவி தினகரன் அதிரடி..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி பிரச்சனைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைக்கட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும். விதி எண் 110-ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இல்லை […]

அ.தி.மு.க.வில் அவர் உறுப்பினர் கூட திவாகரன் கிடையாது.! டிடிவி தினகரன் அதிரடி 5 Min Read
Default Image

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் ,அமைச்சர் ஜெயக்குமாரை கிண்டல்…!

சென்னை; ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் ஓ.பி.எஸ். புகாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மையான தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் உள்ளனர். டிடிவி.தினகரன் ஒரு மாயமான் என்று ஓ.பி.எஸ். விமர்சித்திருந்தார். பதவியை விட முக்கியம் என நினைப்பவர்கள் அதிமுகவில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அணி   ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தது என்று டிடிவி குற்றம்சாட்டினார். மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத் தலையர் என்று டிடிவி.தினகரன் கிண்டல் […]

கிண்டல் 3 Min Read
Default Image

எங்களை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை ; தங்க தமிழ்ச்செல்வன்…!

சென்னை; .  டிடிவி தினகரனின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் , அதிமுகவின் உண்மையான தலைமை யார் என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல் மக்கள் தெளிவு படுத்தி இருப்பதாக கூறினார்.தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் நடைபெறும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்  கட்சியில் இருந்து தங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அவர் கூறினார். sources; dinasuvadu.com

டிடிவி தினகரன் 2 Min Read
Default Image