#Breaking : இந்தியாவில் கண்டறியப்பட்ட புதியவகை ஒமிக்ரான் திரிபு.!

இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீனாவில் மீண்டும் தொடங்கிய புதிய வகை கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. புதிய வகை ஒமிக்ரான் வகை இந்தியாவில் 2 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 2 பேருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் புதிய வகை ஒமிக்ரான் திரிபு BF.7 எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

#Breaking:”தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக் தகவல்!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் … Read more

#Breaking:நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 374  ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,72,626 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்வு. இது தொடர்பாக,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 700 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,72,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!

ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பெருக்கும் மற்றும் … Read more

#BREAKING: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சென்னை டிஎம்சி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு … Read more

#BREAKING: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக உயர்வு!

நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்றை தினம் வரை 223 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு தரப்பில் … Read more

கொரோனாவுக்கு குட்பை…ஃபைசர் மாத்திரைக்கு அனுமதி!

அமெரிக்கா:கொரோனாவை குணப்படுத்த ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் … Read more

அதிகரிக்கும் ஒமிக்ரான்:பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!

நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றானது,பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி,நாட்டில் மகாராஷ்டிரா,கர்நாடகா, தெலுங்கானா,டெல்லி,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் … Read more

“500 மில்லியன் இலவச கொரோனா விரைவு பரிசோதனைகள்” – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்கா:கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி(500 மில்லியன்) பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் … Read more

#Breaking:சென்னையிலிருந்து ஆந்திரா சென்றவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

ஆந்திரா:சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கென்யாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து,அங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்,அப்பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,ஆந்திரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.