செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-ஆவது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32-ஆவது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு பின்னர் திரும்பி பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடிய ஒரு வருடத்திற்கு மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார். இதன்பின் மதுமான கொள்கை முறைகேடு தொடர்பான கொள்கை … Read more

முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

kavitha

Kavitha: திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து கே.கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதன்பின் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு. கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் … Read more

கெஜ்ரிவால் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது… மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்!

Arvind Kejriwal

Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதனிடையே, மார்ச் 21ம் தேதி முதல் ஒருவாரமாக … Read more

கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி மனு.. கடும் அபராதம் விதிக்கப்படும் – டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை

Arvind Kejriwal

Arvind Kejriwal: கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரிய மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் ஒருவாரமாக அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் … Read more

ஹேமந்த் சோரனின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

Hemant Soren

Hemant Soren: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. நில அபகரிப்பு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இரவு அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது முன்பாகவே தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோர ராஜினாமா செய்திருந்தார். எனவே, நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரன் உட்பட 5 பேர் மீது ஜார்கண்ட் … Read more

செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் … Read more

கெஜ்ரிவாலை பதவி நீக்குங்க… மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யகோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் மார்ச் 21ம் தேதி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறை காவல் சென்ற 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அரவிந்த் … Read more

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

arvind kejriwal

Arvind Kejriwal: டெல்லி நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேசமயம் மத்திய பாஜக அரசை … Read more