கோடை விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.!
கோடை விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.!
தேர்வுகள் முடிவடைந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதால், திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், சுமார் 3 கிமீ தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார், அரை மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். அந்த வகையில், இலவச தரிசன வரிசையில் உள்ள காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலை 2 மணிநேரத்தில் மட்டும் 36,900 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனராம்.