டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா,நேற்று நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 57 கிலோ இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் கல்ஜான் ரகாட்டை 12-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.
மேலும்,இது தொடர்பாக,”ஆசிய சாம்பியன்ஷிப் 2022 இல் எனது நாட்டிற்காக தொடர்ந்து மூன்றாவது தங்கத்தை வென்றுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எனது பயிற்சியாளர்கள்,எனது குடும்பத்தினர், WFI, எனது நண்பர்கள், எனது நலம் விரும்பிகள் மற்றும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஆதரவு குழு, அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை”,என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,பிப்ரவரியில் நடந்த டான் கோலோவ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதனிடையே,ரவி 2020 ஆம் ஆண்டு டெல்லியிலும், கடந்த ஆண்டு அல்மாட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…