உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய பெண் அன்ஷு மாலிக்…!

Published by
Edison

மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நார்வேயின் ஒஸ்லோவில் நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த அரையிறுதி போட்டியின் 57 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியனான(20 வயதான) இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் பங்கேற்று,ஜூனியர் ஐரோப்பிய சாம்பியன் சோலோமியா வின்னிக்கை 11-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதன்மூலம்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை அன்ஷு படைத்துள்ளார்.

உலக அளவில் நான்கு இந்திய மல்யுத்த வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.(கீதா போகட் (2012), பபிதா போகட் (2012), பூஜா தண்டா (2018) மற்றும் வினேஷ் போகட் (2019) – வெண்கலம் வென்றனர்).

இந்நிலையில்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அன்ஷு தகுதி பெற்றுள்ளார்.இதில் வெற்றி பெற்றால்,2010 இல் சுஷில் குமாருக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய மல்யுத்த வீரராகம் வாய்ப்பு அன்ஷுவுக்கு உள்ளது.

மேலும்,இது தொடர்பாக அன்ஷு கூறுகையில்:”இது மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டோக்கியோ விளையாட்டில் என்னால் செய்ய முடியாததை நான் இங்கு செய்தேன். எனது கடைசி போட்டியாக நினைத்து ஒவ்வொரு போட்டியிலும் நான் போராடினேன்.

இதற்காக நான் கடுமையாகப் பயிற்சி பெற்றேன், நான் எனது 100 சதவிகிதத்தை கொடுக்க விரும்பினேன்,எனது கடைசி போட்டியைப் போல இறுதிப் போட்டியில் போராடுவேன்,” என்று அவர் கூறினார்.

இதனையடுத்து,அன்ஷூ மாலிக்,இன்று மாலை நடைபெறும் இறுதிச் சுற்றில், 2016 ஒலிம்பிக் சாம்பியனான ஹெலன் மாரூலிஸை எதிர்கொள்கிறார்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

8 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

8 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

8 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

8 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

9 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

9 hours ago