தொடக்க நாளில் மோசமான சாதனை.! 92 ஆண்டுகாலத்திற்கு பிறகு கத்தார் அணிக்கு நடந்த சோகம்…

Default Image

கத்தாரில் நேற்று தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில், 92 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தொடரை நடத்தும் கத்தார் அணி தோல்வி.

உலகெங்கும் அதிக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நேற்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இதில் தொடக்க நாளான நேற்று முதல் போட்டியில் குரூப் A விலிருந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியான கத்தார் மற்றும் ஈக்குவடார் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஈக்குவடார் அணி, கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணி ஃபிஃபா உலகக் கோப்பையில் தொடக்க போட்டியில் தோற்பது 92 ஆண்டுகாலத்தில் இதுவே முதன்முறையாகும்.

கத்தார் அணி நேற்று 0-2 என்ற கோல் கணக்கில் ஈக்குவடார் அணியிடம் தோற்று 92 ஆண்டு கால மோசமான வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்