டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு – ஜோகோவிச் உறுதி…!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜோகோவிச் கடந்த வார இறுதியில் கோல்டன் ஸ்லாம் தகுதிக்கான மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்தார்.2021 ஆம் ஆண்டில் தனது ஆஸ்திரேலிய ஓபன்,பிரஞ்சு ஓபன் மற்றும் ரோலண்ட் கரோஸ் வெற்றிகளில் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

பல ஆண்டுகளாக,நான்கு ஸ்லாம்களையும் ஒரு ஒலிம்பிக் தங்கத்தையும் ஒரே ஆண்டில் எந்த வீரரும் வென்றதில்லை.ஆனால்,ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் 1988 இல் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர் ஆவார்.

முன்னதாக,தனது 20 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விம்பிள்டனை வென்ற பிறகு,டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது தனக்குத் தெரியாது என்று ஜோகோவிச் தெரிவித்தார்.

இந்நிலையில்,ஜோகோவிச் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தனது விமான பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ததாகவும், ஒலிம்பிக்கில் செர்பியா சார்பாக பங்கேற்பதில் பெருமைப்படுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும்,இதுகுறித்து,ஜோகோவிச் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஒலிம்பிக் அரங்கில் பிரகாசமான பதக்கங்களுக்கான போட்டியில், எங்கள் தேசிய அணியில் சேருவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, செர்பியாவிற்கான விளையாட்டு எப்போதுமே ஒரு சிறப்பான மகிழ்ச்சியையும் உந்துதலையும் தருகிறது, நம் அனைவரையும் மகிழ்விக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்! போகலாம்.”, என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு முன்னர்,கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் விளையாட்டுப் போட்டிகளில் ஜோகோவிச் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

13 minutes ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

1 hour ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

1 hour ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

3 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

3 hours ago