World Chess Championship [file image]
செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது.
இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் இளம் உலக சாம்பியனாகும் வாய்ப்பிற்காக மொத்தவிருக்கிறார். இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நவம்பர் 20 முதல் டிசம்பர் 15, வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு உலகம் முழுவதும் பல நாடுகள் விண்ணப்பங்களை அளித்தனர். அதில் இந்தியாவில் குஜராத், டெல்லி மற்றும் சென்னையில் நடத்துவதற்கு இந்தியா செஸ் சம்மேளனமும் முயற்சி செய்தனர். அதன் பின் சமீபத்தில் தமிழக அரசும் தனியாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு முயற்சி செய்தனர்.
ஆனால், FIDE தற்போது இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சிங்கப்பூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத் ஆனந்தம், நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலகத்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், ஆனந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…