குஜராத் இல்லை ..சென்னை இல்லை ..சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்!!

Published by
அகில் R

செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன்  இளம் உலக சாம்பியனாகும் வாய்ப்பிற்காக மொத்தவிருக்கிறார். இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நவம்பர் 20 முதல் டிசம்பர் 15, வரை நடைபெறும்  என்று தெரிவித்துள்ளனர்.

இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு உலகம் முழுவதும் பல நாடுகள் விண்ணப்பங்களை அளித்தனர். அதில் இந்தியாவில் குஜராத், டெல்லி மற்றும் சென்னையில் நடத்துவதற்கு இந்தியா செஸ் சம்மேளனமும் முயற்சி செய்தனர். அதன் பின் சமீபத்தில் தமிழக அரசும் தனியாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு முயற்சி செய்தனர்.

ஆனால், FIDE தற்போது இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சிங்கப்பூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத் ஆனந்தம், நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலகத்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், ஆனந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…

36 seconds ago

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…

3 mins ago

களைகட்டும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…

13 mins ago

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்..! 2000 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசாங்கம் அறிவிப்பு!

லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால்…

33 mins ago

அதிரும் மெரினா..! அனல் பறக்க போகும் விமான சாகச நிகழ்ச்சி 2024!

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற…

49 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு., ஹரியானா சட்டமன்ற தேர்தல் நிலவரம் இதோ.,

ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு ,  காஷ்மீரில் 3 கட்டங்களாக…

51 mins ago